Wednesday, October 22, 2008

சிரிக்க.. ஒரு யானைக்கதை.

சத்தியமா உண்மையா நடந்ததுங்கோ..நானும் நண்பணும் எங்கள் ஊரிலிருந்து சற்று தொலைவிலிருந்த ஒர் ஊருக்கு ஒரு நண்பணை பார்க்க சென்றிருந்தோம். கொஞ்சம் காட்டுப் பாங்கான பிரதேசம் யானைகளின் நடமாட்டம் அதிகமுள்ள இடம். மோட்டார் சைக்கிளில் போவது என்பது கொஞ்சம் பயம்தான் அதுவும் மங்கலான மாலை வேளயில் எங்கள் பயணம்.



நண்பன் போகும் போதே பின்னாலிருந்தே ஆரம்பித்துவிட்டான் டேய் மச்சான் இந்த இடத்திலதான்டா ஒருத்தன யானை தூக்கிபோட்டு மிதிச்சது.. இந்த இடத்துலதான்டா ஒருத்தன ஓட.. ஓட.. விரட்டினது என பல கதைகள் அவன் சொன்னத கணக்கில எடுக்கலன்னாலும்.. கொஞ்சம் மனசுக்குள்ள பயம்தான்.. யப்பா அதுவும் யானை அதுவும் காட்டு யானை மாட்டுபட்டம்... சங்குதான்.

இப்படி கொஞ்ச தூரம் போய் இருப்பம் நண்பன் திடீரென்று மச்சான் யானைடா.. "யானைடா என்று கத்த ஆரம்பிச்சுட்டான்.."



நானோ "அட போட.. சும்மா விடாத.."



அவன் "இல்லடா உண்மையா யானடா"



நான் "எங்கடா"



அவன் "முன்னால ஒருங்க பாருடா"



யப்பா முன்னால ஒரு ஓரமா இருந்து யானை எங்களை நோக்கி வருகின்றது.. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பிரேக் பிடித்தேன்.. டமால் இருவரும் கீழே.. மச்சான் ஓடுடா.. நண்பன் சொல்ல இருவரும் ஆளுக்கொளு திசையில் எதுவுமே தெரியவில்லை.. கண் எல்லாம் இருட்ட ஒரு பெரிய மரத்தில் கஸ்டப்பட்டு ஒடி ஏறிட்டன். பின்னங்கால் புரடியிலடிக்க ஓடுவது... என்று சொல்லுவாங்களே அப்படி ஒரு ஓட்டம். நண்பனைப் பார்த்தேன் அவனும் எதிரே ஒரு மரத்திலே தஞ்சம். நல்லவேளை இலகுவாக ஏறக்கூடிய மரம்... இருவருமே பாதுகாப்பான இடத்தில். அதுக்கு அப்புறம்தான் யானை வந்த திசையைப் பார்க்க மனம் வந்தது.



யானை மெதுவாக எங்கள் பைக் விழுந்து கிடந்த இடத்திற்கு வந்து பைக்கை மெதுவாக தூக்க முயற்சி செய்தது ஆனால் என்ன நடந்ததோ தெரியாது யானை எங்களை விட வேகமாக அதுவும் பெரிய சத்தம் போட்டு கத்துக் கொண்டு ஓடியது. அடப்பாவி எனக்கு ஒன்றுமே புரியவில்லை நான் நண்பனைப் பார்க்க நண்பன் என்னைப்பார்க்க இருவருக்கும் குழப்பம்.. அப்படியே கொஞ்சநேரம் இருந்து சுற்றும் முற்றும் பார்த்து (யானை திரும்ப வந்தாலும்.. கொஞ்சம் யாக்கிரதைதான்..ஓடின ஓட்டம் அப்படி.. ) மெதுவாக இறங்கி பைக் கிட்ட போய் பார்த்த போதுதான் தெரிந்தது.. யானை பைக்கைப் பிடித்து தூக்கிய இடம் சைலன்சர் என்று.. அதில் ஏதோ எரிந்து தீய்ந்த அடையாளம்.. எனக்கும் நண்பனுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.. என்னத்த சொல்ல...

இப்படி உங்களுக்கும் ஏதாவது யானைக் கதை இருக்கா.. வாங்க வந்து சொல்லுங்க.

No comments:

Post a Comment